Saturday 2 May 2020

Emil Daughter Larusa Dance

Cinima News

Tharmarajah Son of Thuvarakan Talent


பாடலுக்கு 10 இசைக்கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்ட Multi - Instrumental Asian Mix Cover Version .. கீழே உள்ள Link மூலம் முழுமையான காணொளியைக் காண முடியும்.




அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி



தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
 பால் – 1 கப்
 சர்க்கரை – 1/2 கப்
 தேங்காய் துருவல் – 1/2 கப்
 ஏலக்காய் தூள் – சிறிதளவு


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

 முதலில் அரிசி மாவு 1 கப் எடுத்துக்கொள்ளவும். அடுத்து இந்த ரெசிபி ரெடி பண்ண கடாயில் 1 கப் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் சுவை பிடிக்காதவர்கள் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம். இந்த பால் மிதமான அளவிற்கு சூடு வந்தால் போதும். அதன்பிறகு பாலுடன் சர்க்கரை 1/2 கப் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.

 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:

 அடுத்து தேங்காய் துருவல் 1/2 கப், பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். அடுத்து வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் சேர்த்தபிறகு இதனையும் நன்றாக கிளற வேண்டும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:

 அரிசி மாவு ரெசிபி: அடுத்து அந்த பாலில் எடுத்துவைத்துள்ள அரிசி மாவை இதனுடன் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்தே இதை நன்றாக கிளறிவிட வேண்டும். அடுத்து நன்றாக கிளறிய பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். 1 மணி நேரம் இதை மூடிவைக்க வேண்டும். நன்றாக ஆறியபின் தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும். அடுத்து இந்த மாவை சப்பாத்தி மாவின் பதம் போல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.







அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:


 அரிசி மாவு ரெசிபி: அடுத்து சப்பாத்தி மாவின் பதம் போல் வந்த பிறகு உருண்டையாக உருட்டி அதை தட்டி கொள்ளவும். மாவை உருண்டை வடிவில் தட்டிய பிறகு பாத்திரத்தின் மூடி அல்லது குக்கி கட்டரால் கட் செய்துகொள்ளவும். எல்லா மாவையும் இதே போல் செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளவும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 5:


 அரிசி மாவு ஸ்நாக்ஸ்: அடுத்து இந்த அரிசி மாவில் நட்ஸ் வகைகளையும் சிறிதாக நறுக்கி சேர்த்து செய்தால் இன்னும் சுவை கிடைக்கும். இப்போது தனியாக தட்டில் எடுத்து வைத்ததை வேக வைக்க வேண்டும். அதற்கு தனியாக ஒரு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்துக்கொள்ளவும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:

 ஸ்டாண்ட் இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரம் கூட பயன்படுத்தலாம். அடுத்து இந்த ஸ்வீட்டின் மேல் ஆவி நீர் பட்டால் ஸ்வீட்டானது வீணாகி விடும். அதனால் மூடியின் மேல் துணியை கட்டி மூடிவைக்க வேண்டும். அப்போதுதான் ஆவி நீர் ஸ்வீட் மேல் விழாது.

 துணியை கட்டி மூடியபிறகு மிதமான சூட்டில் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். அரிசி மாவு ஏற்கனவே நன்றாக வெந்ததனால் இப்போது 2 நிமிடம் வேகவைத்தால் போதும். 2 நிமிடம் வேகவைத்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளலாம். அடுத்ததாக சிறிதளவு தேங்காய் துருவி வைத்துக்கொள்ளவும்.





 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 8:


பின் வேக வைத்த கேக்கை தேங்காய் துருவலில் போட்டு கேக்கின் இரண்டு பகுதியிலும் தொட்டு எடுத்துக்கொள்ளவும். அடுத்து கேக் அழகாக தெரிவதற்கு பிஸ்தாவை கேக்கின் மேல் வைக்கவும்.


 அவ்ளோதாங்க இந்த அரிசி மாவு கேக் ரெடி. அரிசி மாவில் செய்த மாறியே இருக்காது அவ்ளோ ஒரு சுவையான ரெசிபி இது. கண்டிப்பா எல்லாரும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.

கொடிய கொரோனாவினால் உடலின் மொத்த உறுப்புகளும் செயலிழந்து மரணத்தை நேரில் பார்த்து மீண்டு வந்த சிறுமி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கொரோனாவுக்கு சிக்கிய 12 வயது சிறுமி, தாம் மீண்டு வந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.லூசியானா மாகாணத்தில் கோவிங்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 12 வயதான ஜூலியட் டேலி.ஏப்ரல் தொடக்கத்தில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிக்கு உள்ளானார் ஜூலியட். 


ஆனால் மருத்துவ ஊழியரான ஜூலியட்டின் தாயார் அந்த அறிகுறிகளை குடல் அழற்சி என்றே கருதியுள்ளார். காரணம் கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகளான வரட்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என எதுவும் அவருக்கு இல்லை என்பதே.ஆனால், ஜூலியட்டின் உதடுகள் திடீரென்று நீல நிறத்தில் மாறத் தொடங்கியதும் தாயார் ஜெனிபர் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.


மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் ஜூலியட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரெறு ஜூலியட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள முதன்மை மருத்துவமனைக்கு ஜூலியட்டை அனுப்பி வைத்துள்ளனர்.மாகாண முதன்மை மருத்துவமனையில் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார் ஜூலியட்.நான்கு நாட்கள் செயற்கை சுவாசத்தின் உதவியில் சிகிச்சை நடந்துள்ளது. 




அதன் பின்னர் சுய நினைவை இழந்துள்ளார் ஜூலியட். இந்த நிலையில் அவருக்கு உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க துவங்கியுள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் ஜூலியட் படிப்படியாக மீண்டுள்ளார்.


தாம் மரணத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிறுமி ஜூலியட், பெற்றோருடன் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்ற ஆசையாலயே மீண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று
த் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மார்ச் 17ம் திகதி கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ம் திகதி அன்று வீடு திரும்பினார்.


இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார். 


அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரக்கறி வகைகளில் கொரோனா வைரஸ் பரவுமா மரக்கறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. இநத நிலையில் இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது.உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 


இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கீரை வகைகள்:கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.


 காய்கறி, பழங்கள்:காய்கறி, பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.


வேர் வகைக்காய்கள்:கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள். 


 காளான்:காளான் பயன்படுத்தினால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். 


பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால், கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.இவை தவிற பீன்ஸ், அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது, வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

சளி காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம்


இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. இதனாலேயே துளசி செடியை நாட்டு மருத்துவத்தில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் துளசியை வளர்ப்பதன் மூலம் நோயற்ற வாழ்க்கையை வாழலாம். சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், யாருக்காவது இருமல், சளி, காய்ச்சல் என்றால் இருக்கவே இருக்குது துளசி கசாயம் என்பார்கள்.

இது 1960 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் துளசி கசாயத்தை குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும். இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் துளசி கசாயத்தை தான் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றர். 

தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரையாவது காய்ச்சலுக்கும், சளி மற்றும் இருமலுக்கும் துளசி கசாயத்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொன்னால், ஏளனமாக சிரித்து கிண்டலடிப்பார்கள். உண்மையிலேயே அதை பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் அதன் மருத்துவ மகத்துவம் தெரியும். இதனால் தான் துளசி செடியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். 

 துளசியின் மருத்துவ குணம் துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்
திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். துளசியின் மகிமை துளசி செடியை வீட்டில் வளர்ப்பதற்கு மற்றொரு காரணம், இது மற்ற தாவரங்களை விட, அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவையும் நச்சுப்புகையையும் தனக்குள் கிரகித்துக்கொண்டு அவற்றை சுத்திகரித்து, சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டது.

மேலும் துளசி செடி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள் என எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது. மூலிகைகளின் ராணி மூலிகைகளின் ராணி எனப்படும் துளசி செடிக்கு திவ்யா, திருத்துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, துளசி, கிருஷ்ணதுளசி, ராமதுளசி என பல்வேறு பெயர்களும் உண்டு. துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். தினமும் சாப்பிடுங்க துளசி நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையும் காணாமல் போய்விடும். 


இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி செடி. சிறு வயதில் இருந்தே துளசி இலைகளை மென்று தின்றுவந்தால், சர்க்கரை நோய் நாம் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது. துளசி சாறு மகிமை துளசி இலையை சாறெடுத்து அதனோடு எலுமிச்சை சாறையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கூடவே சிறிது தேன் கலந்து, உணவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து அருந்தி வந்தால் உடல் எடை குறைய தொடங்கும். 


துளசி இலையோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து சாறு பிழிந்து அதில் சுமார் 50 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, அதோடு சிறிது சீரக பொடியையும் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த மருத்துவ முறையை பயன்படுத்தும்போது உப்பு, புளிப்பு, காரம் குறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. துளசி இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து தோல் வியாதிகளுக்கு பற்று போடலாம். 


 துளசியும் வேப்பிலையும் துளசி இலை, எலுமிச்சை சாறுடன், சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும். செம்பு பாத்திரத்தில் தேவையான அளவு தூய தண்ணீர் விட்டு அதில் துளசி இலையை போட்டு எட்டு மணி நேரம் வரை மூடி ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் என்றும் இளமையுடனும், தோல் சுருக்கமின்றியும், கண் பார்வை குறைபாடு இன்றியும் வாழலாம்.

வீட்டில் தொடர்ந்து முடங்கிக் கிடப்பதால் தூக்கமில்லையா நிம்மதியான தூக்கத்திற்கு சிறந்த தீர்வு என்ன

“நிறைய தண்ணீர் குடித்துவிட்டேன், கடந்த சில மணி நேரங்களாக மொபைலைக் கூட பார்க்கவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று என அறுநூறு வரை எண்ணிவிட்டேன். ஆனாலும் தூக்கம் வரவில்லை.சமீபத்தில் பலர் இவ்வாறு கூறுகின்றனர். 

ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் ?கொரோனா பரவுவதால் ஊரடங்கு நிலை அறிவித்த பிறகு தூங்க முடியவில்லை என பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 



ஊரடங்கு உத்தரவிற்கு முன் சரியான நேரத்தில் தூங்கியவர்கள் கூட இப்போது தூக்கமின்மை பிரச்சனையால் தவித்து வருகின்றனர். சரியான நேரத்தில் தூங்குவதற்கு என்ன செய்யவேண்டும்? பொதுவாக அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு அலுவலகம் சென்று விட்டு, வீடு திரும்பியவுடன் மற்றொரு முறை உடற்பயிற்சி, பிறகு உறக்கம் என ஒருவரின் அன்றாட வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும். 

ஆனால் இப்போது வீட்டை விட்டு வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நிலை இல்லை.எனவே பலரின் அன்றாடப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான அன்றாடப் பழக்க வழக்கங்களே நல்ல தூக்கம் வருவதற்கு முக்கிய அம்சமாக உள்ளது என லாபோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெவின் மார்கன் கூறுகிறார்.தூக்கம் குறித்து பல ஆண்டுகளாக கெவின் மார்கன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். 


 ஊரடங்கு உத்தரவு பலரின் நடைமுறை வாழ்க்கையை மாற்றியுள்ளதே தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் என கெவின் கூறுகிறார்.உங்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் எப்போதும் போல காலை சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மற்றும் அன்றாட வேலைகளை செய்ய துவங்கினால் இரவு சரியான நேரத்தில் தூங்க முடியும். 


குறிப்பாக தற்போது பலர் பகலில் தூங்குகின்றனர், இந்த சூழலில் அந்த பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள். அதுவே இரவு நேரத்தில் தூக்கமின்மையை ஏற்படுத்த முக்கிய காரணம். பகலைவிட இரவில் தூங்குவதுதான் மிகவும் அவசியம். அதுவே ஆரோக்கியமானதும் கூட, என்கிறார் கெவின் மார்கன்.சூரிய ஒளி தேவை:

இந்த முடக்க நாட்களில் நம்மால் வெளியில் செல்ல முடியவில்லை, அதுவும் நம் தூக்கத்தை பாதிக்கலாம். நமது கண்களுக்கு சூரிய ஒளி தேவை. மெலடோனின் ஹார்மோன்தான் நமது தூக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்கவேண்டுமானால் நமக்கு சூரிய ஒளி தேவை.வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நம் மேல் சூரிய ஒளி விழுவதில்லை. 

இதனால் தேவையான மெலடோனின் அளவு நம் உடலில் இல்லாமல் போகலாம்.எனவே வீட்டில் இருந்தபடியோ அல்லது வீட்டிற்கு வெளியில் சென்றோ சூரிய ஒளி உங்கள் மேல் விழ நேரம் ஒதுக்குங்கள். உங்கள் கண்களை மூடாமல் அல்லது கண்ணாடி அணிந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் கண்களுக்கு சூரிய ஒளி அவசியம்.இதனால் சரியான நேரத்தில் தூங்கவும் முடியும். 

 மன அழுத்தத்தை ஒதுக்கி வையுங்கள்.ஊரடங்கு நேரத்தில் பலர் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அனைத்து விதமான பிரச்சனைகளையும் யோசித்து பதற்றமும் அதிகரிக்கிறது.அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை. இவ்வாறான சூழ்நிலையில் முன்பு நாம் இருந்ததே இல்லை. இது அனைவருக்குமே புதிதுதான். எனவே இந்த சூழலை நினைத்து வருந்தாதீர்கள்.தூங்குவதற்காக படுக்கைக்கு செல்லும்போது வருத்தமாக செல்லாதீர்கள் என்கிறார் பேராசிரியர் கெவின்.

நீங்கள் வீட்டில் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால் படுக்கை அறையில் அலுவலக பணியை மேற்கொள்ளாதீர்கள். தூங்குவது தவிர வேறு எதற்காகவும் படுக்கை அறையை தேர்வு செய்யாதீர்கள்.அப்படி வேறு வழியின்றி படுக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டால், அதன் உறையை மாற்றுங்கள்.பணி மேற்கொள்ளும்போது இருந்த உறையை மாற்றுவதன் மூலம், உங்கள் பார்வையிலும் மாற்றம் ஏற்படும்.தூங்கவேண்டும் என உங்கள் மனதிற்கு தோன்றும் அளவிற்கு அந்த இடத்தை மாற்றுங்கள்.



வீட்டில் இருக்கும்போது திரைப்படம் , மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பொழுதுபோக்கிற்காக மது அருந்த வேண்டும் என தோன்றலாம்.மது அருந்தினால் சீக்கிரம் தூங்க முடியும் என்பது நீண்ட நாட்களுக்கு உள்ள நல்ல தீர்வு அல்ல.மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் குடிக்கலாம். ஆனால் எப்போதும் எவ்வளவு குடிப்பீற்களோ அவ்வளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் கெவின்.ஆனால், மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்ற நிலைக்கு சென்றுவிட கூடாது. அது எந்த வகையிலும் ஆரோக்கியமானது அல்ல.

குழந்தைகளைக் குறி வைக்கும் புதிய பேராபத்து கொரோனாவின் விளைவா தீவிர ஆய்வில் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலைகள் அதிகரித்து வருகிறது.மோசமான இந்த அழற்சி நோய் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அதிகம்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பிரிட்டனில் கடந்த ஒரு வாரமாக பெரும் கவலைகளை இந்த அழற்சி நோய் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸில் அழற்சி நோய் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது உயிராபத்தானதாக இருப்பதாக அந்தநாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.இது கொரொனா வைரசின் தாக்குதலா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதனை மிகவும் தீவிர விடயமாக எடுத்து ஆய்விற்குள்ளாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனை நான் மிகவும் தீவிர விடயமாக எடுத்துள்ளேன். இது வரைக்கும், எங்களிடம் மருத்துவ ரீதியான எந்த விளக்கங்களும் தரவுகளும் இல்லை. இது கொரொனா வைரசின் தாக்கமா, அல்லது வேறு ஏதும் தொற்றின் தாக்கமா என்பது அறியப்படல் வேண்டும். தற்போதைக்கு எங்களிடம் இதற்கான பதில் இல்லை” என ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் பாடசாலைகளை ஆரம்பிக்க தயார்படுத்தும் நிலையில், சிறு பிள்ளைகள் கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட மாட்டார்கள் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிறு பிள்ளைகளையே கொரொனா தாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இது கொரோனாவின் அறிகுறி என பிரிட்டன் சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். 


இந்த அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.நாக்குகள், தொண்டையில் கொப்புளம், கண்கள் சிவப்பது, வாந்தி, சோர்வு, சுவாசப்பிரச்சனை ஆகியவை இந்த அழற்சியின் விளைவுகள். உடலில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றுகிறது.இந்த அழற்சியினால் பாதிக்கப்படுபவர்கள் முகம், கண் வீங்கி பசியின்மையுடன் காணப்படுகிறார்கள். குழந்தைகள், சிறுவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தைகளிடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்த வகையான விளைவுகள் தென்படுகிறதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.கவாசாகி (Kawasaki) நோய் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் ஒரு வகை அழற்சி நோயாகும். அதையொத்ததாக இந்த அழற்சி தென்படுகிறது. 

வீக்கம் இதய தமனிகளை பலவீனப்படுத்தும், இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்குவதை தடைப்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை ஒவ்வொரு 100,000 பேரில் எட்டு குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆனால் இதையொத்த அறிகுறிகளுடன் அண்மை நாளில் பிரிட்டனில் பல குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டனில் சுமார் 20 சிறுவர்கள் இந்த அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.

There’s room for one more

After a crazy night out, as soon as I saw my bed I fell flat on my bed. As I was drifting of I noticed that I had my shoes on. I got up to take of my shoes off, as I was taking my shoes off I noticed my window open as I went over to close it I saw a black limo. As I looked closer I realised it looked like a funeral car. As I was trying to figure out what was going on of the men shouted up to me, “ there’s room for one more”. One side of me said why not, what could go wrong but the other side of me told me to stay home. I decided I’d stay home. I politely declined, closed my window and went to sleep.


After one week After finishing my shopping I decided it was time to go home. As I stood waiting for the list I remembered last weeks incident, for some reason it sent a shiver down my spine. As the lift doors slowly opened I stood there dumbstruck. The same man I saw in the car. She looked behind him to see the lift packed with people. She looked back at the man and with a smirk he said “there’s room for one”. Too shocked, I shook my head and stepped back. As the lift doors closed I saw him shrug.


I felt a little creeped but shrugged it off. After few seconds I heard a snap. After another few seconds I heard a crash.The lifts cables had snapped.


 No one survived.

Written By .
Mathan Rashwini
Age 14



Latest Tamil Cinema News

இன்றைய ராசி பலன் Astrology Nalla Neram 02-05-2020 Jaya TV Show Online


ஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval கல்யாணம் புத்திர பாக்கியம் பெற Magesh Iyer 02-05-2020 Puthuyugam TV Show Online




Aanmeega Thagaval  02-05-20,Aanmeega Thagaval  02-05-2020 Puthuyugam TV Show Online,Aanmeega Thagaval  02-05-20 Tamil Show online,Aanmeega Thagaval  02/05/2020 Today Episode Online,Aanmeega Thagaval  02-05-20 02th May  2020,Watch Aanmeega Thagaval  02-05-20 Puthuyugam TV Show Online,02-05-20 Aanmeega Thagaval  Watch Online,Aanmeega Thagaval  Show May  2020 Of 02,Aanmeega Thagaval  02-05-20 Show Today 




இன்றைய ராசிபலன் Daily RasiPalan 02-05-2020 Puthuyugam TV Show Online

Daily Rasi Palan  02-05-20,Daily Rasi Palan  02-05-2020 Puthuyugam TV Show Online,Daily Rasi Palan  02-05-20 Tamil Show online,Daily Rasi Palan  02/05/2020 Today Episode Online,Daily Rasi Palan  02-05-20 02th May  2020,Watch Daily Rasi Palan  02-05-20 Puthuyugam TV Show Online,02-05-20 Daily Rasi Palan  Watch Online,Daily Rasi Palan  Show May  2020 Of 02,Daily Rasi Palan  02-05-20 Show Today 247




Friday 1 May 2020

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

தேவையான பொருட்கள் :

 பிரெட் ஸ்லைஸ் – 10
காலிபிளவர் – 250 கிராம்
குட மிளகாய் – 2
வெண்ணெய் – 2 பெரிய ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
டொமேட்டோ கெட்ச் அப் – தேவைக்கு
கரம் மசாலா – இரண்டு
சிட்டிகை உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – 1 சிறிய ஸ்பூன்
பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு,
தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் – பொரிக்க

 செய்முறை :

 * முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 * காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

 * சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.

 * பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.

 * கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

 * அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

 * பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.

 * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

 * இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்.

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

 கத்தரிக்காய் – 4
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிது
மிளகுத் தூள் – சிறிது
கடுகு – சிறிது
உளுத்தம்பருப்பு – சிறிது
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
எண்ணெய் – சிறிது.



 செய்முறை :

 * கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

 * வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

 * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும்.

 * கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

 * சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

Australians living in Germany describe what it's like being unwell with ...

Q&A "Immunity passports" in the context of COVID-19

Why is important to boost your immune system Interview With Nutrition...

Dance from Niroshan

Kasmeer Pushparajah Antonybala Song From Germany

Saththiyama na sollurendi Un.......


Good morning More Kids Dialogues Learn English for Kids Collection of Easy Dialogue

யார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் விக்ரமாதித்தன் கதை




காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் இந்த கதையை வேதாளம் கூறியது. ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். 


அப்படி ஒரு முறை இரவு நேரத்தில் திருடுவதற்கு அந்த ஊரில் சுற்றி திரிந்த போது, இரவு பணியிலிருந்த காவலர்கள் அவனை பார்த்து பிடிப்பதற்காக துரத்தினர். அவர்களிடம் இருந்து ஓடி தப்பிக்க அருகிலிருந்த ஒரு வீட்டின் ஒரு அறையில் புகுந்து ஒளிந்து கொண்டான் மாயன். அப்போது அந்த அறையிலிருந்த சுகந்தி என்ற திருமணமாகாத இளம் பெண் அவனை பார்த்து விட்டாள். ஆனாலும் வெளியிலிருந்த காவலர்களிடம் மாயனை அவள் காட்டிக்கொடுக்க வில்லை. இதனால் சுகந்தி மீது மாயனுக்கு ஒரு நல்லபிப்ராயம் ஏற்பட்டது. சுகந்தியும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவனிடம் ஈர்க்கப்பட்டாள். 


பிறகு தினமும் அந்த இரவு வேளையில் அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் மிக நெருங்கி பழகிய காரணத்தால் சுகந்தி கர்பமடைந்தாள். இதை அறிந்த மாயனும் அவளை கூடிய விரைவில் தாம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தான். ஆனால் எதிர்பாராத விதமாக மாயன் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் சமயம், காவலர்கள் அவனை கைது செய்ய முயன்ற போது அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்து போனான். 



இதைக் கேள்விப்பட்ட சுகந்தி மிகுந்த அதிர்ச்சியடைந்தாள். அதே நேரத்தில் அவளுக்கு, ஜெயன் என்பவனுடன் திருமணம் செய்ய அவளது பெற்றோர்கள் எண்ணினர். சுகந்தியும் தனது கர்ப்பத்தை மறைத்து ஜெயனை திருமணம் செய்து கொண்டாள். பின் பத்து மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, அது ஜெயனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை தான் என ஜெயன் உட்பட அனைவரையும் நம்பவைத்துவிட்டாள். 

 அந்த ஆண் குழந்தைக்கு நகுலன் என்று பெயரிட்டு இருவரும் பாசத்துடன் வளர்த்துவந்தனர். சில வருடங்களில் நகுலனின் தந்தை ஜெயன் இறந்தார். இப்போது நன்கு வளர்ந்து இளைஞனாகி விட்ட நகுலன், இறந்துபோன தனது தந்தை ஜெயனுக்கு கங்கை கரையில் திதி கொடுக்கும் பூஜையை செய்து அந்த திதி பிண்டத்தை கங்கை நீரில் விட சென்ற போது, இரண்டு கைகள் நீருக்குள்ளிருந்து தோன்றியது. அதில் ஒன்று ஜெயனுடையது மற்றொன்று மாயனுடையது. இரண்டும், தானே நகுலனுடைய தந்தையென்றும், தனக்கே திதி பிண்டத்தை தருமாறு கேட்டது. 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நகுலன் தனது தாய் சுகந்தியிடம் இதை பற்றி கூறினான். அப்போது சுகந்தி நகுலனின் உண்மையான தந்தை மாயன் தான் என்ற உண்மையை கூறினாள். இப்போது யாருக்கு இந்த திதி பிண்டத்தை அளிப்பது என்ற குழப்பத்திலாழ்ந்தான் நகுலன். “விக்ரமாதித்தியா நகுலன் அந்த பிண்டத்தை யாருக்கு அளிக்க வேண்டும்? எனக் கேட்டது வேதாளம். “திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு பெண்ணை கர்பமாக்கிய தவறை செய்தவன் மாயன். 

மேலும் நகுலன் பிறக்க காரணமாக மாயன் இருந்தானே தவிர, ஒரு தந்தைக்குண்டான கடமை எதையும் நகுலனுக்கு செய்யவில்லை. அது போல தான் கர்பமடைந்ததை மறைத்து ஜெயனை திருமணம் செய்து, ஒரு மிகப் பெரும் துரோகத்தை ஜெயனுக்கு செய்தாள் நகுலனின் தாய் சுகந்தி. 

 அதே நேரத்தில் நகுலன் தன் மகனென்று கருதி அவனுக்கு சிறந்த தந்தையாக வாழ்ந்து மறைந்தான் ஜெயன். இவை எல்லாவற்றையும் தீர ஆலோசிக்கும் போது ஜெயனே அந்த பிண்டத்தை பெறும் தகுதியுடையவனாகிறான்” என விக்ரமாதித்தியன் பதிலளித்த உடன் அந்த வேதாளம் மீண்டும் பறந்து முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

Coronavirus Q&A What does the pandemic mean for world politics ABC News

இன்றைய ராசி பலன் Indraya Rasi Palan தினப்பலன் Mahesh Iyer 01-05-2020 Puthuyugam TV Show online

Thala Ajith Sir அ மட்டும் இப்போ நேர்ல பாத்தனா அழுதிடுவேன் Theepetti Ganesan Emotional Interview

Ennanga Sollunga Corona version Funny Factory

முகத்தில் உள்ள கருமையை போக்கும் எளிய அழகு குறிப்புகள்

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்கள் இதனை செய்ய வேண்டாம். 


 வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம். ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். 

இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும். கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம். ஒரு சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். 

அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப்பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும். மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, 

முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

பெண் கருவுறாமைக்கான காரணங்கள்

ஒரு திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவைத் தாண்டியும் குழந்தைப் பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.

கருவுறாமை என்றால் என்ன?
கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும்.
இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம்.
இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.
கருவுறாமை என்னும் பிரச்சனை இன்று பெண்களுக்கு அதிக எண்ணிக்கைகளில் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் அவற்றைக் குணப்படுத்தப் பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.
இந்த கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் அவருக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.
ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகின்றது?
  • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
  • கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • கருப்பை வாயில் பிரச்சனை.

குழந்தையின்மை காரணம் மாதவிடாய் தொந்தரவு:-

மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது.
மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்சனையின் அறிகுறியே ஆகும்.
நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
வலியுடன் கூடிய மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க அனேக வாய்ப்புள்ளது. ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

குழந்தையின்மை காரணம் வயது:-

அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.
ஆகக் குழந்தைப் பேறுவைத் தள்ளிப் போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் காலகட்டத்திலே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்கால மன உளைச்சல்களைத் தவிர்க்கும்.

குழந்தையின்மை காரணம் எடை:-

ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகின்றது.
எனவே பெண்கள் பொதுவாக அவர்களது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குழந்தையின்மை காரணம் நோய்தொற்று:-

பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.
அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சாலச் சிறந்தது.

குழந்தையின்மை காரணம் சுரப்பிகள்:-

கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது.
இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சனை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.